கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்!

0
17

கொழும்பு – பிலியந்தலை, கரதியான குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்ப படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here