கரிநாள் அனுஷ்டித்தவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தல்!

0
63

“இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைது இடம்பெற வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகின்றது.

இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின்கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.

இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால் வடக்கில் நேற்று (நேற்று முன்தினம்) இனவாதம் தூண்டப்பட்டது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அதனை செயலில் காட்ட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here