காட்டுத்தீயின் கோரம் – அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்கள் எரிந்து நாசம்!

0
112

2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தெற்கு அரைக்கோள நாடுகள் கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை நெருப்பு வளையத்தில் சிக்கியுள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ள வெப்பநிலையே இந்த தீ விபத்துகளுக்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதால், அங்குள்ள காடுகள் கொழுந்து விட்டு எரிகின்றன. விக்டோரியா மாகாணத்தில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. இதில் சுமார் 15,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here