குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

0
120

குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் தோட்ட தொழிலாளர்கள் ஏழு பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்களும் ஆண்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் எழு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here