கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியீட்டில் சிக்கல்

0
11

கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் மலையாள வெளியீட்டு உரிமையினை ப்ரித்விராஜ் ப்பற்றி இருக்கிறார். இதன் வெளியீட்டில் தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

கேரளாவில் இதர மொழி படங்கள் வெளியிடும் போது, பங்குத் தொகை 50% மட்டுமே என்ற விதி இருக்கிறது. ஆனால், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்திற்கு 55% பங்குத் தொகை வேண்டும் என்று ப்ரித்விராஜ் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் ஹோம்பாளே நிறுவனம் தலையிட்டு பேசினால் சுமுக முடிவு எட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், ப்ரித்விராஜ் நிறுவனத்திடம் விநியோக உரிமை கொடுக்கப்பட்டுவிட்டதால், அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here