கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு.!

0
24
dailythanthi

பயங்கர நிலநடுக்கம்

கொலம்பியாவின் மேற்கே ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் அமைந்திருந்ததுடன், பொகோட்டாவிலும் இதன் அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. இதனால் அங்கு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புக் கருதி வீதிகளுக்கு வெளியேறி தஞ்சமடைந்தனர்.

பலி எண்ணிக்கை உயர்வு
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 132 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 570 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காலி நகரில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவுக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தேசிய பேரிடரைப் பிரகடனப்படுத்தி, அப்பகுதியில் ராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது.

இதனிடையே, கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிர உதவிகளை வழங்கி வருகிறது’ என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொலம்பியாவுக்கு சுற்றுலா செல்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here