சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கோவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது.
கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார். கோவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீலில் ஏற்பட்ட பாதிப்புக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.