சட்டவிரோத சிகரெட் பாவனையில் அதீத அதிகரிப்பு

0
160

சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதற்குக் காரணம் பல சந்தர்ப்பங்களில் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு மற்றும் இதன் காரணமாக இந்த நாட்டில் சட்டவிரோத சிகரெட் பாவனையின் போக்கு அதிகரித்து வருகின்றது.கடந்த வருடமும் சிகரெட் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் சுமார் 60 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சட்டவிரோத சிகரெட் பாவனை 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here