சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தாய் கிழவி’ திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் நடித்துள்ள ’ஆழி’ படமும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. ஒரே தேதியில் இரு படங்கள் வெளியாக இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




