பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவரை தனது வாகனத்திற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 68 வயதுடைய பாடசாலை வேன் சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிதா,கடந்த வியாழக்கிழமை (18) இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் ஒரு குழந்தையின் தந்தையான குற்றவாளி, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 30,000 அபராதமும் ரூ. 500,000 இழப்பீடும் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். பணம் செலுத்தத் தவறினால்மேலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 345 மற்றும் 365(a) இன் கீழ்
சிறுமி ஒருவரை மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபர் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். சட்டத்தரணி குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக குறித்த போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும், பெரும்பாலும் சாரசியினால் கடைசியாக ஒப்படைக்கப்பட வேண்டிய குழந்தை அவர்தான் என்றும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, சிறுமியை இனிப்புகளைக் கொடுத்து கவர்ந்திழுத்து, பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக சாரதி தெரிவித்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சிறுமி ஒரு தோழியிடம் இது குறித்துத் தெரிவித்ததை அடுத்து, அவரது தாயார் சாரதியை சந்தித்து, பின்னர் காவல்துறையில் புகார் அளித்த பிறகு இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பொறுப்பு குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டதால், இந்தக் குற்றம் மிகவும் கடுமையானது என்று நீதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
இந்தக் குற்றம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.




