சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான ‘ஜனநாயகன்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், சென்சார் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால் தாமதமானது. இதையடுத்து, படக்குழு நீதிமன்றத்தை அணுகியது. கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் சென்சார் குழுவிடம் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போது, படம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா என்பது சந்தேகமாகியுள்ளது.




