இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அவர்களுடன் அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மறைந்த முன்னால் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நினைவாக, அவரின் இல்லத்திற்கு வருகைத்தந்து அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவு கூர்ந்தார்.
மேலும் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
டி.சந்ரு