இலங்கைக்கான இந்திய துாதுவர் சந்தோஷ்ஜா, நேற்று நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார் .
குறித்த விஜயத்தில் அவருடன் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால்ஜயசூரிய, மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டதோடு அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடமொன்றையும் பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியினால் புனரமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலை பாரத பிரதமர் நரேந்திர மோடியினால் கடந்த 2017ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது