திங்கட்கிழமை காலை இஸ்ரேலின் டெல்அவியையும் வடபகுதி துறைமுக நகரான ஹைபாவையும் இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஈரான் இஸ்ரேலிற்கும் இடையில் நான்காவது நாளாக தொடரும் மோதல்களில் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேலின்மத்திய பகுதியில் நால்வர்கொல்லப்பட்டுள்ள அதேவேளை பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாலைக்கு முன்பாக ஜெருசலேம் மற்றும் டெல்அவியில் பாரிய சத்தங்கள் கேட்டன,வானில் ஏவுகணைகள் தென்பட்டன. ஈரானின் தாக்குதல் காரணமாக டெல்அவியில் பல தொடர்மாடிகளும் பொதுமக்கள் குடியிருப்புகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,இதேவேளை ஹைபாவில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை மத்திய இஸ்ரேலில் ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் .
மத்திய இஸ்ரேலில் நான்கு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. எங்கள் பொதுமக்கள இலக்குவைக்கப்படுகின்றனர் என்பது எங்களிற்கு தெளிவாக தெரிகின்றது என இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு காட்சி இதுபோன்று தென்பகுதி கரையோரத்திலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 87 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் , 30 வயது பெண் ஒருவர் உயிருக்காக போராடுகின்றார்.
தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்பு பணியாளர்கள் தேடிவருகின்றனர். நாங்கள் இங்கு வந்தபோது பெரும் அழிவை பார்த்தோம் நான்குவயது குழந்தையை மீட்ட துணைமருத்துவ பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.