தண்டனையில் திருப்தி இல்லை ; இலங்கை ஆசிரியர் சங்கம்

0
16

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினையின் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

பரீட்சை மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் திருப்தி அடைய முடியாது.

பரீட்சையில் முறைகேடு செய்பவர்களுக்கு ஒரே தண்டனை பரீட்சை மதிப்பீட்டுக்கு தடை விதிப்பதுதான் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அதிகாரங்களை வழங்கினாலும் சில குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றதாகவம் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பரீட்சைகளை நம்பகத்தன்மையுடன் எதிர்கொள்ளும் திறன் இல்லாவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடு என்ன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here