தீபாவளி பண்டிகை; ஹட்டன் நகர சபைக்கு 3.6 மில்லியன் ரூபா வருமானம்

0
126

தீபாவளி பண்டிகை காலத்தில் வணிக நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட 146 நிலத் துண்டுகளை டெண்டர் செய்ததன் மூலம் அட்டன்-டிக்கோயா நகர சபைக்கு ரூ. 3.6 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது

அட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன நேற்று (03) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தீபாவளி பண்டிகை காலத்தில், அட்டன் நகரில் நடைபாதை வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அட்டன் ஸ்டார் சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட உள்ளன.

அரசாங்க மதிப்பீட்டுத் துறையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை தொடர்ந்து வியாபார பகுதிகளை ஒதுக்குவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.

நிதிக் குழு உறுப்பினர்களின் மேற்பார்வையின் கீழ் நகர சபையின் செயலாளர் ஷியாமலி ரூபசிங்க நேற்று டெண்டர்களைத் திறந்தார்.

டெண்டர் தொகைக்கு கூடுதலாக, தற்காலிக வர்த்தகத்தை நடத்துவதற்காக நிலப் பகுதியை கையகப்படுத்தியவர்களிடமிருந்து கழிவு வரி மற்றும் வணிக வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வணிக நடவடிக்கைகளும் நகர சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நகர சபை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here