தெற்கு கடல் பகுதியில் இருந்து 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

0
21

தெற்கு கடற்கரையில் 51 மிதக்கும் பொட்டலங்களில் இருந்து இலங்கை கடற்படை அதிகளவிலான சட்டவிரோத போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE), 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 12 கிலோகிராம் ஹாஷிஷ் ஆகியவை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மொத்தம் 839 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் பொட்டலத்தின் மூலத்தைக் கண்டறிய காவல்துறை மற்றும் கடற்படை குழுக்கள் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here