இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக இஷான் கிஷன் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார், நமீபியா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும் சிக்ஸர்கள் பறக்க விட்டு வாண வேடிக்கை காட்டினார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.