மாத்தறையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்ற சுற்றுலா வேன் நானு ஓயா டெஸ்போட்டில் பகுதியில் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயாபொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நுவரெலியா ஹட்டன் A7 பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த விபத்து ஏற்பட்டதாகவும் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் விசாரணை நடத்தி வரும் நானுஓயா,பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.