தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களை களவாடிய தொழிற்சங்கத் தலைவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட செல்வகந்த தோட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிவாரணப்பொருட்களே தமது கட்சி மற்றும் மாற்று கட்சி தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரால் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.