ஓபநாயக்கவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (08) மாலை இந்த அனர்த்தம் சம்பவித்ததாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவன் பெற்றோருடன் குறித்த விடுதிக்கு வந்த நிலையில், நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஓபநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.