நுவரெலியாவில் கடும் மழை பல இடங்களில் பனி மூட்டம் வாகன சாரதிகள் அவதானம்.

0
241
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய வரட்சியான காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களில் மாலை வேளையில் கணத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக நீரின்றி வரண்டு கிடந்த ஓடைகள் ஆறுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் ஆகிய புத்துயிர் பெற்று வருகின்றன. மழையுடனான காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை,கடவல,வட்டவளை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் குடாகம,ஹட்டன்,
கொட்டகலை,தலவாக்கலை,சென்கிiளாயர்,லிந்துலை,சமர்செட்,ரதல்ல் நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் மலையகத்தில் காணப்படும் பிரதான வீதியினை இணைக்கும் ஏனைய வீதிகளிலும் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்கவரத்து பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மழை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் இருப்பதனாலும்,வளைவுகள் நிறைந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை  செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here