‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 2

0
11

நான், ​நாகப்பட்டினம் தேசிய ஆரம்​பப்​பள்​ளி​யில் படித்த காலங்​களில் டெக்​னாலஜி அதி​க​மாக வளர்ச்​சி​யடைய​வில்​லை. இப்​போ​திருப்​பது போல, எல்​.கே.ஜி. யூ.கே.ஜி வகுப்​பு​களும் அப்​போது கிடை​யாது. ஒன்​றாம் வகுப்​பிலிருந்​து​தான் படிப்பை தொடங்க வேண்​டும். 1962-ம் ஆண்டு நான் ஒன்​றாம் வகுப்பு படித்​துக் கொண்​டிருந்​தேன். அந்த வயதில் சின்​னப்​பிள்​ளை​களுக்கு என்ன சேட்​டை, விளை​யாட்​டுத்​தனம் இருக்​குமோ, அது அனைத்​தும் எனக்​கும் இருந்​தது. ஆனால் கூடவே பயமும் அதி​க​மாக இருக்​கும்.

வழக்​கம் போல பள்​ளிக்​குச் சென்று கொண்​டிருந்​தேன்! அப்​போது இந்​தியா மீது சீனா, போர் தொடுக்​கப்​போகிறது என்ற செய்தி ஊரில் பரவி இருந்​தது. ‘அந்த போர் பாதிப்பு நாகப்​பட்​டினத்​துக்​கும் ஏற்​படும்; இங்​கும் குண்டு போடு​வார்​கள்’ என்று யாரோ ஒரு​வர் சொன்​னது காட்​டுத் தீயாகி இருந்​தது.

இதைக் கேள்​விப்​பட்​டதும் எனக்​குப் பயம். குண்டு போட்டு விட்​டால், என்ன செய்​வது? என்று பள்​ளிக்​கூடம் போக​மாட்​டேன் என வீட்​டில் சொல்​லி​விட்​டேன். ‘இங்​கெல்​லாம் குண்டு போட​மாட்​டாங்க, ஸ்கூலுக்​குப் போ’ என்று அப்​பா- அம்மா எவ்​வளவோ சொல்​லிப்​பார்த்​தும் கேட்​க​வில்​லை.

‘போகவே மாட்​டேன்’ என்று தரை​யில் உருண்டு புரண்டு அழுதேன். என் அப்​பாவுடன் சவுரி​ராஜன் என்​பவர் எப்​போதும் இருப்​பார். அவரை, சவுரி அண்​ணன் என்று அழைப்​போம். அவருக்கு வேளாங்​கண்ணி பக்​கம் பெரியதும்​பூர் என்ற ஊர். எப்​போதும் அப்​பாவுடனேயே இருப்​பார்.

எனக்கு இரண்டு அக்கா இருந்​த​தால், நான் பிறக்​கும் முன், ‘என் தம்பி பாஸ்​கரன் பிறக்​கப் போகிறான்’ என்று சொல்​லிக் கொண்​டிருந்​தவர், அவர்​தான். நான் பள்​ளிக் கூடத்​துக்​குப் போக​மாட்​டேன் என்று அழுது அடம்​பிடித்த நேரத்​தில், சவுரி அண்​ணன் என்னை இழுத்​துப் போய் பள்​ளி​யில் விட்டு விட்டார்.

பள்​ளி​யில் என் கைகளை​யும் கால்​களை​யும் கயிற்​றால் கட்​டி, ஓரத்​தில் நிற்க வைத்து விட்​டார்​கள். “வீட்​டுக்​குப் போகக்​கூ​டாது, ஸ்கூல் முடி​யும் வரை நீ இங்​க​தான் இருக்​கணும்” என்று டீச்​சர்கள் சொல்​லி​விட்​டார்​கள். சீனாக்​காரன் குண்டு போட்​டால் ஏதும் ஆகி விடுமோ? என்ற பயத்திலேயே இருந்​தேன். “குண்டு போட்டா போடட்​டும், நமக்கு ஒன்​றும் ஆகாது” என்று டீச்​சர்​கள் சொன் னாலும் எப்​படி​யா​வது அங்​கிருந்து தப்​பிக்க வேண்​டும் என்று நினைத்​துக் கொண்​டிருந்​தேன்.

அப்​போது சக மாணவன் ஒரு​வன், ‘என்ன பாஸ்​க​ரா?’ என்று அழைத்​த​படி, என்​னைத் தற்​செய​லாகத் தொட்​டான். இது​தான் சரி​யான தருணம் என்று தரை​யில் விழுந்து அழத்​தொடங்​கினேன். அழுது ‘ஓவர் ஆக் ஷன்’ செய்​தால் வீட்​டுக்கு அனுப்​பி​விடு​வார்​கள் என நினைத்​து, எவ்​வளவு முடி​யுமோ அவ்​வளவு ஆவேச​மாக அழுதேன். அவர்​கள் அசைய​வில்​லை. எனது அந்த முயற்சி தோல்வி யடைந்​த​தால், பிறகு அழுகையை விட்​டு​விட்டு அமர்ந்​து​விட்​டேன் மாலை வரை. சீனாக்​காரன் குண்டு போட வில்லை என்​ப​தால் நிம்​ம​தி.

ஸ்கூல் முடி​யும்​போது டீச்​சர்​கள் வந்​து, “குண்டு போடு​வாங்​கன்னு சொல்லி அழு​தி​யே, எங்​கடா போட்​டாங்​க?” என்று கேட்​டனர். நான் அவர்​களைப் பார்த்​துக்​கொண்டே நின்​றேன். “இங்​கலாம் வந்து போட​மாட்​டான். சீனாக்​காரனுக்கு நம்​மூருக்கு வழி தெரி​யாது​டா” என்று அவர்​கள் சொன்ன பிறகு​தான் என்​னுடைய பயம் வில​கியது. என்​னுடன், ஐசக் சாலமன் நத்​தானியல் கிரண்​டி, தினகரன், மோகன்​தாஸ், கே.ர​வி, கண்​ணை​யன், எத்​தி​ராஜ், ராஜா, டி.எஸ்​. செல்​வ​ராஜ், பழனிவேல், ராமலிங்​கம் ஆகியோர் படித்​தார்​கள்.

நாங்​கள்​தான் நண்​பர்​கள். பள்​ளியி​லிருந்து இரண்டு தெரு தள்ளி எனக்கு வீடு இருந்​த​தால், வீட்​டிலிருந்து சாப்​பாடு எடுத்​துச்​சென்று விடு​வேன். ஆனால், ஐசக் சாலமன் நத்​தானியல் கிரண்​டிக்கு பள்​ளிக்​குள்​ளேயே வீடு இருந்​தது. அவனுடைய அம்மா அதே பள்​ளி​யில் டீச்​ச​ராக இருந்​தார். ஆனால் அவனும் சாப்​பாடு எடுத்து வந்​து​விடு​வான். “எங்​களுக்கு வீடு தள்ளி இருக்​கற​தால, நாங்க சாப்​பாடு எடுத்​துட்டு வர்​றோம்.

நீ ஏன்டா எடுத்​துட்டு வர்​றே?” என்று எல்​லோரும் கேட்​பார்​கள். அவன், “நண்​பர்​களோட சேர்ந்து சாப்​பிடறதுக்​காக எடுத்​துட்டு வர்​றேன்” என்​பான். எப்​போதும் சிரிப்​பு, கும்​மாளம், அரட்டை என இருந்த பள்ளி நட்பு இப்​போதும் என் நினை​வுக்கு வந்து சிரிக்க வைக்​கும். இதில் சில நண்​பர்​கள் உயிருடன் இல்லை என்​றாலும் மற்​றவர்​களு​டன் தொடர்​பில்​தான் இருக்​கிறேன்.

அப்​போது பள்​ளிக்​கு, மை பேனா கொண்டு செல்​வோம். பேனா​வில் எழுது​வதற்கு அவ்​வளவு ஆசை​யாக இருக்​கும். பேனாவை பிடிப்​ப​தற்​காகவே எதை​யா​வது எழு​திக்​கொண்டே இருப்​பேன். மை தீர்ந்​து​விட்​டால், “மூணு சொட்டு மை கடன் கொடு​டா” என்று நண்​பர்​களிடம் கேட்​போம். அப்​போதே கடன் வாங்க கற்​றுக் கொடுத்​திருக்​கிறது பேனா. கடன் வாங்​கிய மையை திருப்​பிக் கொடுக்​கா​விட்​டால், பெரும் சண்​டை​யாக​வும் அது மாறும்.

அதே போல ரப்​பருக்​கும் சண்டை நடக்​கும். வாங்கி சென்​றவர்​கள் திருப்​பித்​தர​வில்லை என்​றால், “வீட்​டில் ரப்​பர் எங்​கே?” என்று கேட்​டு​விடு​வார்​களோ என்ற பயத்​திலேயே இருப்​போம். பிறகு நண்​பர்​களிடம் சண்டை போட்டு அது வகுப்பாசிரியர் வரை போன கதை​யும் உண்​டு. மாலை​யில் பள்ளி முடிந்து விளை​யாடி விட்​டு, ஆறுமணிக்​குள் வீட்​டுக்கு வந்து விட வேண்​டும்.

வீட்டு வாசலில் வேப்​பிலை, மஞ்​சள் தூள் போட்​டுத் தண்​ணீர் வைத்​திருப்​பார்​கள். அதில் கை, கால்​களை கழு​விய பிறகு​தான் வீட்​டுக்​குள் வரவேண்​டும். பிறகு படிக்க ஆரம்​பிக்க வேண்​டும். இல்லை என்​றால் ஆடா தொடை கம்​பையோ, வேறு ஏதாவது கம்​பையோ வைத்​திருப்​பார்​கள். அதை வைத்து இழுத்​தால் உடலில் வரி வரி​யாக விழும்.

அதனால் அந்த அடிக்​குப் பயந்தே படிக்​கிறோமோ இல்​லை​யோ, புத்த கத்​தைக் கையில் வைத்​துக்​கொண்டு அந்த நேரத்​தில் அமர்ந்து விடு​வோம். என் அப்​பா, அடிக்​கடி கடிதம் எழு​திக் கொண்​டிருப்​பார். அப்​போது வீட்​டில் இருக்​கும் நாளிதழை வாசிக்​கச் சொல்​வார். செய்​தி​யின் தலைப்பை சத்​த​மாகப் படித்​து​விட்​டு, பிறகு செய்​தி​களை குறைந்த சத்​தத்​தில் சரி​யான ‘மாடுலேஷனி’ல் வாசிக்க வேண்​டும்.

வாசிக்​கும் போது, ல, ழ, ள உள்​ளிட்​ட​வற்றை தவறாக உச்​சரித்​தாலோ, உச்​சரிப்பு மாறி​னாலோ பளீரென்று பிடரி​யில் அடி விழும். பிறகு தவறாக சொல்​லி​விட்​டதை உணர்ந்து அதைத் திருத்தி வாசிப்​போம். இப்​போதும் கூட பேசும்​போது ஏதாவது வார்த்​தைத் தவறி​னால், “அப்பா அடித்​து​விடு​வாரோ?” என்ற பயம் வரும்.

சினி​மா​வில் நான் பின்​னணி குரல் கொடுப்​ப​தற்​கும், நடிக்​கும் போது சரி​யான உச்​சரிப்​பில் பேசுவதற்​கும் அப்பா தந்த பயிற்சி தான் பலமாக இருக்​கிறது. விடு​முறை நாட்​களில் நாகப்​பட்​டினம் அரு​கிலுள்ள திரு​மெய்​ஞானம் என்ற ஊரிலிருந்து நாராயண​சாமி என்ற அய்யா வந்து எங்​களுக்கு கர்​நாடக சங்​கீதம் கற்​றுக் கொடுத்​தார். என் சகோ​தரி​களு​டன் நானும் கற்​றுக் கொண்​டேன். முழு​மை​யாக தொடர முடிய​வில்​லை. அப்​போது கற்​றுக்​கொண்ட சங்​கீதம் இப்​போது சினிமா பாடல்​கள் பாட உதவி​யாக இருக்கிறது.

HinduTamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here