பதுளை, மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
34

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று சனிக்கிழமை பசறை பகுதியில் 137.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பெல்காதன்ன பகுதியில் 134 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி ஆறுகள், ஓடைகள் பெருக்கெடுத்துள்ளதுடன் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பதுளை மாவட்டத்தின் எல்ல,ஹாலிஎல, பதுளை மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மொனராகலை மாவட்டத்தில் பிபிலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மாவட்ட அனர்த்த முகமைத்துவ மையத்தினால் முதற்கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here