பதுளையில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

0
10

பதுளையிலுள்ள கைலகொட முதியோர் இல்லத்துக்கருகிலுள்ள வயல்வெளியில் இன்று (18) மர்மமான முறையில் நிர்வாணமாக கிடந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களின் பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றபோது அங்கு கிடந்த சடலத்தைப் பார்த்து பொலிஸாருக்கு தகவலளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here