பந்தை சேதப்படுத்தினாரா அஸ்வின் ? – பரபரப்பு குற்றச்சாட்டு!

0
4

நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. இந்த போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அணித்தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளது.

இரசாயனம் தடவப்பட்ட துண்டை பயன்படுத்தி, பந்தை சேதப்படுத்தியதாகவும், இதனால் பந்தின் எடை அதிகரித்து, பேட்டில் படும்போது அது உலோக ஒலியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதாரங்கள் அளித்தால் இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும். ஆதாரமின்றி குற்றச்சாட்டு சுமத்தினால், மதுரை பாந்தர்ஸ் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழைக்காலம் என்பதால், இரவில் பனிப்பொழிவு இருப்பதாலும் பந்து வழுக்காமல் இருக்க பந்தை துடைக்க துண்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் நடுவர்கள் முன்பே பந்தை துடைக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here