சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை இன்று (10) நுகர்வோர் விவகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ராஜகிரிய, கொத்தட்டுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வாசனைத் திரவியங்கள் டுபாயிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




