பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

0
13

பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இன்று (09) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பலப்பிட்டிய, மகாலதுவ பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பிரதான சந்தேகநபர் ஆவார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இன்று (9) பலப்பிட்டிய நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

விசாரணைகளின் பின்னர் வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைச் சுட்டுவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here