பல்கலை மாணவரின் தற்கொலைக்கு பகடிவதையே காரணம் – விசாரணையில் உறுதி!

0
3

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர் சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி அன்று தற்கொலை செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதுவரை நடந்த விசாரணையின் முடிவுகளின்படி, மாணவர் பகிடிவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மனச்சோர்வு அல்லது எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும்

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பகிடிவதை சம்பவங்களை வெளிவராமல் தடுக்க நடவடிக்கை எடுத்துவந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை, பகிடிவதை தொடர்பான 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதிவாகியுள்ளதுடன், இதில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை 1997 என்ற துரித மூலம் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here