பல்கலைக்கு தெரிவாகும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

0
160

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு நான்கு மாத கட்டாய சமுக சேவை வழங்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேற்கண்ட தகலை தெரிவித்துள்ளார்.அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களை 4 மாதகால சமுக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அத்துடன், அடுத்த ஆண்டு 41,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here