புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

0
135

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணத்தில் வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மட்டுமன்றி, சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களின்போதும், குறித்த நியமனங்களைப்பெறுவோர் சிக்கல்கள் இன்றி சேவையாற்றுவதற்கான வகையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here