இன்று (26.11.2018) மலையகம் முழுவதுமாக முன்னெடுக்கபட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வழங்ககோரிய போராட்டங்களில் புஸ்ஸல்லாவையில் மனித சங்கிலி போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தை உள்ளடக்கிய தோட்டங்களை சேர்ந்த 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். குறித்த மனித சங்கிலி போராட்டம் மெல்போட் தோட்டத்தில் ஆரம்பித்து நகர் வழியாக நகர சபை மண்டபத்தை அடைந்து அங்கு மாபெரும் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இதன் போது தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் கம்பணிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுருத்தபட்டதுடன் இதற்கான எதிர்ப்பு கோ~ங்களும் எழுப்பபட்டன.