பொகவந்தலாவை நகரில் நாய் மீது வெந்நீர் ஊற்றிய கடை உரிமையாளர்!

0
140

ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு கேமராவில் திங்கட்கிழமை (15) பதிவாகியுள்ளது.

பொகவந்தலாவை  நகரில் சுற்றித் திரிந்த அந்த நாய் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது, கடைக்கு அருகில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அந்த நாய் மீது வெந்நீர் ஊற்றியுள்ளார்.

சூடான நீரில் நனைந்த நாய், வலியால் அலறிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாக அருகிலுள்ள மக்கள் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here