புஸ்ஸ மெடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை ஆசிரியையான தனது மனைவியின் இரண்டு கால்களையும் துண்டித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாகவும், படுகாயமடைந்த 34 வயதுடைய மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடந்துவ பிரதேச பாடசாலை ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கால்களை வெட்டிவிட்டு வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மொபைல் போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றி 2018ஆம் ஆண்டு முறையற்ற முறையில் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.