மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால், தனது 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நபர் ஒருவர், தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அவரது மனைவி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.குறித்த நபர் அங்கு சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இருப்பினும், மனைவி அவருடன் செல்ல மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கணவர், யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது 6 வயது மகளுக்கு ஊட்டியுள்ளார்.