மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில் ஏற்படும் மரண சம்பங்கள் அனைத்தும் PCR பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தொற்று உறுதி செய்யும் பிரேதங்களை நோர்வுட் தகனசாலையிலேயே தகனம் செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அதாவது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மஸ்கெலியாவில் இருந்து கிளங்கன் வரை பயணிப்பதே மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.