மாகாணசபை தேர்தல்களுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (19) பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, அரசாங்கத்துக்கு தேர்தலை பிற்போடும் நோக்கம் இல்லை எனவும், உரிய காலத்தில் தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.