மாத்தளையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தகவல் கோரியுள்ள பொலிஸார்

0
19

மாத்தளை மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (13)இவ்வாறு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிஸார் இதுவரையில் சடலம் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த சடலம் கெக்கிராவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0 6 6 – 2 2 46 222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here