மீண்டும் திறக்கப்பட்ட பேரகல மற்றும் ஹப்புத்தளை பாதை – பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

0
246

கண்காணிப்பு மேடைகளில் மாத்திரம் இருந்து பார்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்த கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பேரகல மற்றும் ஹப்புத்தளை பகுதிகள் தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சாலையின் மூன்று இடங்களில், ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, சாலையின் அந்த பகுதியை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் இரவோடு இரவாக பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி வீதியை சீர்செய்து போக்குவரத்துக்காக திறந்து வைத்துள்ளனர்.நீண்ட விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வருவதால், இவ்வீதியில் பயணிக்கும் போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள், உயரமான இடங்கள் ஆகியவற்றை கண்காணிப்பு மேடைகளில் மாத்திரம் இருந்து பார்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை, மோசமான வானிலை காரணமாக பண்டாரவளை சிறுவர் பூங்கா இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பண்டாரவளை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 21ஆம் திகதி அளவில் பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல மண்சரிவுகள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here