இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.
பின்னர் இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோ மூலம்
மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.இவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
டி சந்ரு