மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட தேடுதல் வேட்டை.

0
164

வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பணிக்கமர்த்தப்பட வேண்டிய வயதெல்லையை விட குறைந்த வயதுடையவர்களை பணிக்கமர்த்தியுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here