மேல்மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0
177

மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் பங்களிப்புடன் நாளை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2023 இல் இலங்கையில் 43,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here