யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இந்த சாதனை பயணம் இன்று முதல் 16ம் திகதி வரை சாதனை தொடரவுள்ளது. பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள், யாழ்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இந்த சாதனை பயணம் 16ம் திகதி வரை தொடரவுள்ளது.
இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவருக்கும் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடிதம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சாதனை பயணத்தை இன்று ஆரம்பிக்கும் இந்த இரட்டை தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.




