இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (25) சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் அரசியல் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டாதாக கூறப்படுகிறது.




