லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது

0
229

ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பான ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்தம்பிதமடைந்துள்ள தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைகள் வேலை நிறுத்தத்திற்கான ஐயப்பாட்டை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்களின்படி, லண்டன் போக்குவரத்து, ரயில், கடல்சார் போக்குவரத்து தொழிற்சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இந்த சலுகையை ஏற்றுக்கொள்வதா என்பதை தொழிற்சங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதுடன் வேலைநிறுத்தங்கள் தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராந்திர வேலை நேரத்தைக் குறைத்து, சோர்வு பிரச்சினைகளைத் தீர்க்க தொழிற்சங்கம் முயற்சிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அத்தகைய கோரிக்கைகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ண்டன் போக்குவரத்து தெரிவித்துள்ளது

ஊதியம் மற்றும் குறைந்த வேலை வாரம் தொடர்பாக ரயில், கடல்சார் போக்குவரத்து சங்கம் மற்றும் லண்டன் போக்குவரத்து இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here