லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

0
151

ஜீலை மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயுவிற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் எரிவாயு இல்லை.

அடுத்த மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் 25,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய பாரியதொரு கப்பல் மாலைத்தீவு கடற்பகுதியை அண்மிக்கவுள்ளது.

அங்கிருந்து சிறு கப்பல்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐந்தாம் திகதியின் பின்னர், நாளாந்தம் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது, என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here