லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஐந்து தோட்டத்தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் 27/07/2023 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த குளவி கொட்டுக்கு இழக்காகி லிந்துலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேர்ஹாம் தோட்டத்தில் 10ம் இலக்க தேயிலை மலையில் வேலை செய்து வந்த தருணம் எதிர்பாராத விதமாக மரத்திலிருந்த குளவி கூடு கலைந்தே தாக்கியுள்ளது. குளவி கொட்டுக்கு இழக்கான ஐவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்