மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொரியை , அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்தார்.
நேற்று (11) பகல் வேளையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லொரியின் இடது பக்கத்தின் நடுவில் சிக்கியுள்ளது.
மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் லொரியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ, ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.