வங்கதேசத்தை பழித்தீர்த்த இலங்கை.. நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய கருணரத்னே

0
205

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணியில் ஆஃபிப் ஹூசைன் 39 ரன்களும், மெஹதி ஹசன் 38 ரன்களும் எடுத்தனர்.இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 183 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் கேப்டன் ஷனாகா 45 ரன்கள் விளாச, கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி. அப்போது இலங்கை அணி வீரர் கருணரத்னே வெற்றி கொண்டாட்டத்தின் போது நாகினி டான்ஸ் ஆடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார்.

இதற்கு காரணம், போட்டி தொடங்கவதற்கு முன் இலங்கை அணி கேப்டன் ஷனாகா வங்கதேசத்தில் ஷகிபுல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக, இலங்கை அணியில் பேட்ஸ்மேன்களும், இல்லை பவுலர்களும் இல்லை என்று கூறி பதிலடி தந்தார்.

இதனால் கடுப்பில் இருந்த இரு அணி வீரர்களும் உயிரை கொடுத்து விளையாடினார். இதனால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுப்போக்கு கிடைத்தது. மேலும், இலங்கை அணியை இதற்கு முன்பு கடந்த காலங்களில் வீழ்த்திய வங்கதேச அணி பாம்பு போல் நடனமாடி வெறுப்பேற்றினர். இதற்கு பதிலடி தரும் விதமாக தான் கருணரத்னே நாகினி டான்ஸ் ஆடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here