வித்தியா கொலை வழக்கோடு இதுவரை 1167 பேருக்கு இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது இவர்களில் 826 பேர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர் என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
வித்தியா கொலையாளிகள் அனைவரும் வெவேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர், மகர, போகம்பரை,வெலிக்கடை , அனுராதபுரம், தும்பரை மற்றும் பதுளை போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டனர் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று போகம்பரைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.